User:Sankaryadhav29

From Wikipedia, the free encyclopedia

Cite error: There are <ref> tags on this page without content in them (see the help page).இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனை முதலில் எதிர்த்த மன்னர்

'''மாவீரன் அழகுமுத்துக்கோனார்'''

மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவ்
Born1710
கட்டாலங்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு
Died1759
நடுக்காட்டூர், தூத்துக்குடி, தமிழ்நாடு
Nationalityதமிழர்
Other namesகோனார், யாதவர்,சேர்வைக்காரர் ஆயர், இடையர்
Occupationமுதல் விடுதலைப் போராட்ட வீரர்
Known forஇந்திய முதல் விடுதலை வீரர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரானவர்

மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவ் (Maveeran Alagumuthu Kone Yadhav, 1710–1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மிக உயர்ந்த இராணுவ திறமை கொண்டவர். இந்தியாவின் முதல் விடுதலை வீரர் மற்றும் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர். கட்டாலங்குளத்தில் 1728 ஆம் ஆண்டு கோனார் சமுதாயத்தில் பிறந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்.[1] இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.[2]


பிறப்பு[edit]

தந்தை மன்னர் அழகுமுத்துக்கோனார் (அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார்.அதன் பிறகு மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு அரண்மனையின் தெய்மான அழகுஅரியநாச்சி என்று பெயர் சூட்டப்பட்டது.அனுமந்தக்குடி போரில் தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

அழகுமுத்துக்கோனின் தந்தை[edit]

அழகுமுத்துக்கோனாரை 1725ல் கட்டாயத்தில் ஏழாவது மன்னனாக முடிசூட்டினர். இவரது வீரத்தால் மதம் பிடித்த யானையை அடக்கும் அசாத்திய துணிச்சல் கொண்டவர். வெங்கடேஷ்வர எட்டப்பர் இவரது வீரத்தை கண்டு தன் படைக்கு தலைமை தளபதி பொறுப்பை வழங்கினார்.கட்டாலங்குளத்தில் வலிமையான ஆட்சியை நிறுவினார்.1750ல் எட்டையபுரத்தை ஆட்சி செய்த வெங்கடேஷ்வர எட்டப்பர் இராமநாத சேதுபதிக்கு உதவ எட்டயபுரம் தளபதி பெரிய முத்துப்பிள்ளையையும் கட்டாலங்குளம் மன்னர் அழகுமுத்துக்கோனாரையும், 6000 படை வீரர்களையும் அனுமந்தகுடிக்கு அனுப்பி வைத்தார்.இருவரின் போர் திறமையினால் கோட்டையை கைப்பற்றினர்.ஆனால் இருவரும் போரில் வீர மரணம் அடைந்தனர்.

சின்ன அழகுமுத்து[edit]

1755ல் அண்ணன் வீர அழகுமுத்துக்கோன் தலைமையில் நடத்திய போரில் சின்ன அழகுமுத்து பெருமாள் கோயில் வாசலில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக[edit]

முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். தென் தமிழகத்தில் மதுரையை மையமாக வைத்து 72 பாளையங்கள் உள்ளன. அதில் மிகப்பெரிய ஆட்சிகளை கொண்டிருக்கும் இரண்டு பாளையமான பாஞ்சாலங்குறிச்சி மற்றும் எட்டயபுரம் பகுதிகளை கைப்பற்றி விட்டால் மற்ற பகுதிகளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி எண்ணியது. 1750 ல் எட்டையபுரம் பகுதியை வரி செலுத்துமாறு ஆங்கிலேயர்கள் எச்சரித்தனர். இதனை கடுமையாக எதிர்த்த அழகுமுத்துக்கோன் பாளையக்காரர்கள் யாரும் கப்பம் கட்ட கூடாது என்று கட்டளையிட்டு வணிகம் செய்ய வந்த வெள்ளையனுக்கு நாங்கள் கப்பம் கட்ட முடியாது என ஓலை அனுப்பினார். 1750 ல் மன்னராக முடி சூடிய முதல் ஆண்டே வெள்ளையர்களை எதிர்க்க துணிந்தார்.இந்தியாவில் முதன் முதலில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களை ஒன்று திரட்டினார். இதன்படி எட்டயபுரம் மன்னரான ஜெகவீரராம எட்டப்பரும் 1751ல் நெற்கட்டான் செவ்வல் பாளையம் பகுதியில் புலித்தேவனும் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்துவிட்டனர். இதனால் அழகுமுத்துக்கோன் மற்றும் பூலித்தேவன் இடையே நட்பு உருவானது.பாளையக்காரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட வேண்டும் என்று சுற்றி உள்ள பாளையங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அனைத்து பாளையக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அழகுமுத்துக்கோன் திட்டமிட்டபடி ஒரு சில பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தவில்லை. வெள்ளையர்களுக்கு எதிராக கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் படைகள் போருக்கு தயாராகிக்கொண்டிருந்தது. அழகுமுத்துக்கோன் தன்னை எதிர்த்து பாளையக்காரர்களை திரட்டுவது ஆங்கிலேயர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி அழகுமுத்துக்கோன் காட்டில் போர்வீரர்களை தயார் செய்து கொண்டிருக்கும் போது மேற்கே ஆங்கிலேய படையை எதிர்க்க பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் உதவியை நாடியதால் அழகுமுத்துக்கோன் படையும் பூலித்தேவனுக்கு உதவி பல போர்களை நிகழ்த்தி வெற்றி கண்டது. மேலும் தங்களது படையில் திருவிதாங்கூர் படையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சேர்ந்து கொண்டது. அதில் கர்னல் எரோன் கெரான் மற்றும் மாபூஸ்கானை அடுத்தடுத்து வென்றனர்.இவரது படை பூலித்தேவன் உட்பட ஒரு சில பாளையக்காரர்களுடன் சேர்ந்து போர் புரிந்தது. 1755ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வரி வசூல் செய்ய அதிகாரிகளை அனுப்பியது இதனால் கோபமுற்ற அழகுமுத்துக்கோன் தனது வாளால் ஆங்கிலேயர்களை வெட்டி தன் உயிர் இருக்கும் வரை தனது தாய் மண்ணில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது என கர்ஜனை செய்தார். பிறகு எட்டயபுரமும் கப்பம் கட்ட கூடாது என எட்டையபுரம் மன்னர் ஜெகவீரராம எட்டப்பருக்கு கடிதம் மூலமாக செய்தி அனுப்பினார்.அதனை தொடர்ந்து ஆங்கிலேய படைகளுக்கும் அழகுமுத்துக்கோன் படைகளுக்கும் இடையே பல கிளர்ச்சிகளும் வன்முறைகளும் வெடித்தன. அதில் ஆங்கிலேயர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.இரண்டு ஆண்டு காலமாக எட்டயபுரம்,கட்டாலங்குளம் பகுதிகள் கப்பம் கட்டாததால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு 1757ல் யூசுப் கான் என்ற அதிகாரியை வரி வசூலிக்க நியமித்தது.யூசுப் கானின் மிகப்பெரும் படைக்கு எதிராக 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். [3] [4]எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெத்தநாயக்கனூர் போர்[edit]

அழகுமுத்துக்கோன் வீரத்தை பற்றி அறிந்து கொண்ட மருதநாயகம் நேரடியாக போரிட்டால் அழகுமுத்துக்கோனை வெல்ல முடியாது என எண்ணி இரவோடு இரவாக எந்த ஒரு அறிவிப்பும் இன்றி பெத்தநாயக்கனூர் கோட்டயை முற்றுகையிட்டான். இவனது சூழ்ச்சி மிகுந்த போரில் பல போர் வீரர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

வீர மரணம்[edit]

அழகுமுத்துக்கோன் வீரத்தை கண்டு மெய்சிலிர்த்த கான்சாகிப் அழகுமுத்துக்கோனிடம் கெஞ்ச ஆரம்பித்தான் உங்களுடைய வீரத்தை போற்றுகிறோம், எட்டயபுரம் மற்றும் கட்டாலங்குளம் பகுதிகளை நீங்களே ஆட்சி செய்யலாம் ஆனால் மன்னிப்பு மட்டும் கேளுங்கள் என்று வற்புறுத்தினான். அழகுமுத்துக்கோன் அதனை மறுத்து துரோகியின் பாராட்டு எங்களுக்கு அவசியமற்றது எனவும் தாய் நாட்டின் விடுதலைக்காக எங்கள் உயிரை விடவும் தயார் எனவும் கர்ஜனை செய்தார். இன்று வெள்ளையனை எதிர்த்து ஒரு அழகுமுத்து, இனி பல்லாயிரம் அழகுமுத்து வெள்ளையர்களை நாட்டை விட்டு துரத்தி அடிப்பார்கள் என்று தான் சாகும் தருவாயிலும் பீரங்கி முன் சிரித்துக்கொண்டே நின்ற மிகப்பெரிய வீரன் அழகுமுத்துக்கோன் பீரங்கியால் வெடித்து பல்லாயிரம் துண்டுகளாக சிதறடிக்கப்பட்டார். இந்திய சுதந்திர வரலாற்றில் இப்படி ஒரு வீர மரணம் எவருக்கும் இல்லை. அதன் பிறகு இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த 248 போர் வீரர்களையும் 6தளபதிகளையும் கொன்று குவித்தது ஆங்கிலேய அரசு.

அரசு மரியாதை[edit]

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் சூலை 11ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2012ஆம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.[4][5] 2015ஆம் ஆண்டு திசம்பர் 26ஆம் நாளன்று இந்திய அரசின் சார்பில் மதுரையில் அழகுமுத்துக்கோன் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.[4][6]

  1. ^ டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and presen
  2. ^ இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன். தினமலர். ஜூலை 11,2016. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. ^ Kumar, Madhan (2017). Thamizh Is Not Just A Language: The Valour. New Delhi: Educreation Publishing. p. 113. ISBN 978-1-5457-0304-5.
  4. ^ a b c "Tributes paid to Alagumuthu Kone". The Hindu. 12 July 2015. ISSN 0971-751X. Retrieved 11 April 2020.
  5. ^ "P Chidambaram releases documentary film on Alagumuthu Kone | Madurai News – Times of India". The Times of India. 24 December 2012. Retrieved 11 April 2020.
  6. ^ "Union Minister releases stamp to commemorate freedom fighter Veeran Alagumuthu Kone | Madurai News – The Hindu". The Hindu. 27 December 2015. Retrieved 4 December 2020.